முஸ்லிம் பெண்ணுடன் ரகசிய திருமணம் நயன்தாராவை நம்பவைத்து கழுத்தறுத்த பிரபுதேவா!

பிரபுதேவாவின் முதல் திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சனை குறித்து பத்திரிகையாளர் பாலா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகரும் இயக்குனருமாக திகழ்பவர் பிரபுதேவா. அதிலும் பல ஆண்டு காலமாக தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்தவர் பிரபு தேவா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் நடன அமைப்பாளரும் ஆவார். மேலும், இவருடைய தனித்துவமான நடனத்திற்கு இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படுகிறார்கள்.

குடும்ப பிரச்சனை காரணமாக பிரபு தேவா சில காலம் படத்தில் நடிக்காமல் இருந்தார். தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதில் சில படங்கள் பெரிய அளவு வெற்றியடையவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு இருக்கிறது.

இதனிடையே பிரபுதேவா 1995 இல் ராம்லதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு விஷால், ரிஷி ராகவேந்திர தேவா, ஆதித் தேவா என்று 3 மகன்கள் பிறந்தனர். தேவா பிரபுதேவாவின் மூத்த மகனான விஷால் தனது 12 வயதில் 2008 இல் காலமானார். அதன் பின்னர் பிரபுதேவாவுக்கு நடிகை நயன்தாரா மீது காதல் மலர்ந்தது.

பிரபு தேவா குடும்பம்: இதனால் பிரபுதேவா தனது மனைவியை விவாகரத்து செய்தார். பின் பிரபு தேவா, நயன்தாரா இடையே பிரச்சனை அதிகமாகி பிரிந்தார்கள். மேலும், பிரபு தேவா தனது உறவுக்கார பெண் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியானது. இவர் முதுகு வலிக்காக பெண் டாக்டரிடம் சிகிச்சை பெற்றுவந்து இருக்கிறார். அப்படியே இருவருக்கும் காதல் ஏற்பட்டதால் காதும் காதும் வைத்தது போல பிரபுதேவா திருமணத்தையே முடித்து விட்டார் என்று செய்திகள் வெளியானது. இதை அவரது சகோதரர் ராஜு சுந்தரமும் கூறி இருந்தார்.

பிரபு தேவா திருமணம்:

இந்த நிலையில் பிரபு தேவாவின் திருமணம் குறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலா பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், பிரபுதேவா ரொம்ப வசீகரமான நபராக இருப்பவர். அதனால் இவரை சினிமாவில் மட்டும் இல்லாமல் வெளியில் இருந்தும் நிறைய பெண்கள் காதலித்தார்கள்.

ஆனால், பிரபுதேவாவுக்கு நடன குரூப்பில் இருந்த ஒரு பெண் மீது காதல் ஏற்பட்டது. இவர்களுடைய காதல் பிரபுதேவாவின் அப்பாவிற்கு தெரிய வந்து கடுமையாக கண்டித்தார். ஆனால், பிரபுதேவா தன் தந்தை பேச்சை கேட்கவில்லை.அந்த பெண்ணை தான் திருமணம் செய்து கொள்ளவேன் என்பர் பிரபுதேவா வீட்டில் போராடினார். அந்த பெண்ணுடைய பெயர் ரமலத். அவர் ஒரு முஸ்லிம். பின் மொத்த குடும்பத்தையும் எதிர்த்து பிரபுதேவா ரமலத்தை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நல்லபடியாக குழந்தையும் பிறந்தது. இவர்களுடைய குடும்ப வாழ்க்கையும் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது.

இருந்தாலும், பிரபுதேவாவின் குடும்பத்திலிருந்து அவர் திருமணம் செய்த பெண்ணை விரட்ட வேண்டும் என்று பிரஷர் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் தான் பிரபு தேவாவின் மகன் இறந்து விட்டான். அதில் அவர் மிகவும் நொந்து போனார். இதனால் தன்னுடைய மனைவியின் மீது பிரபுதேவாவிற்கு வெறுப்பு வந்தது. முதல் திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சனை: பிரபுதேவாவும் அவருடைய முதல் மனைவிக்கும் இடையே பல பிரச்சினை ஏற்பட்டது. பின் இவர் முஸ்லிமாக இருந்த ரமலத்தை இந்துவாக மாற கட்டாயப்படுத்தியிருந்தார் என்று சொல்லப்படுகிறது. இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு கொண்டிருக்கும் போதுதான் நயன்தாராவுக்கும் பிரபுதேவாவிற்கும் இடையே காதல் மலர்ந்தது.

நயன்தாரா பிரபுதேவாவின் மீது அளவுக்கு அதிகமாக பாசத்தை காண்பித்தார். இதனால் பிரபுதேவா தன்னுடைய குடும்பத்தை விட்டு நயன்தாராவுடன் சில காலம் வாழ்ந்து வந்தார். ஆனால், அந்த வாழ்க்கையும் பிரபுதேவாவுக்கு சரியாக அமையவில்லை. தற்போது இவர் மருத்துவரை திருமணம் செய்து இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *