CCTV யில் பதிவான நிர்வாண திருடன்!

வாரியபொல நகரில் உள்ள இரண்டு கடைகளை திங்கட்கிழமை (22) அதிகாலை நிர்வாணமாக வந்த திருடன் உடைத்து திருடியுள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவித்தனர்.

கடையின் மேற்கூரையில் இருந்து இறங்கி அங்குள்ள பணத்தையும் பொருட்களையும் திருடியமை கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் கமெராவில் பதிவாகியுள்ளது.

ஒரு இலட்சம் ரூபாய்கும் அதிகமான பெறுமதியான குடைகள் மற்றும் பணம் என்பன திருடப்பட்டுள்ளதாக கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளதாகத் தெரிவித்த வாரியபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *