காரின் சாவியை காணவில்லை பொலிஸில் புகார் கொடுத்த ரஜனியின் மகள்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது சொகுசு காரின் சாவியை காணவில்லை என சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இணையத்தில் பலரால் பேசப்படும் பொருளாகி உள்ள இந்த விஷயத்தை பற்றிய கூடுதல் விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.
நடிகர் ரஜினிகாந்தின் மகள்கள் குடும்பத்தில் சமீப காலமாக துரதிர்ஷ்டம் சுற்றி சுற்றி அடிக்கிறது போல. ஏனெனில் சில மாதங்களுக்கு முன்னர் தான் தனது வீட்டில் இருந்த தங்க, வைர நகைகளை காணவில்லை என ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். இது அந்த சமயத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.