இந்தியாவின் மணிப்பூரில் வன்முறை கண்டவுடன் சுட உத்தரவு!

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் வன்முறைகள் இடம்பெற்று வந்த நிலையில், மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் அனைத்து பழங்குடியினர் மாணவர் சங்கம் நடத்திய பொது பேரணி வன்முறையாக மாறியதை அடுத்து, வன்முறையில் ஈடுபடுபவர்களைக் கண்டவுடன் சுடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நிலைமையை கட்டுக்குள் வைக்க இராணுவமும் Assam Rifles வீரர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் புதன்கிழமை முதல் ஐந்து நாட்களுக்கு தொலைபேசி இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

வீடுகளும் கடைகளும் வாகனங்களும் பற்றி எரிவது போன்ற படங்களும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இந்த வன்முறையில் இதுவரை மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தீவைப்பு தொடர்பான சில படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளதுடன், “மணிப்பூர் எரிகிறது, தயவுசெய்து உதவுங்கள்” என்று பதிவிட்டு, அதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை Tag செய்துள்ளால்.

பட்டியல் பழங்குடி (ST) பிரிவில் மெய்தேயி சமூகத்தை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை நான்கு வாரங்களுக்குள் பரிசீலிக்குமாறு மணிப்பூர் உயர் நீதிமன்றம் ஏப்ரல் 19 ஆம் திகதி மாநில அரசைக் கேட்டுக்கொண்டது. மத்திய அரசின் பரிசீலனைக்கும் இதை அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *