மார்ச் மாதம் 580 மில்லியன் டொலர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பி வைப்பு!

வேறு நாடுகளுக்கு சென்ற புலம்பெயர் தொழிலாளர்களை நாட்டிற்கு பணம் அனுப்ப வேண்டாம் என சிலர் கூறி வந்தாலும் கடந்த மாதம் மாத்திரம் 580 மில்லியன் அமெரிக்க டொலர்களை புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இந்த மாதங்களில் கோடிக்கணக்கான பணம் நாட்டிற்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *