8 பெண்களை துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 156 ஆண்டுகள் சிறை!

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தை சேர்ந்தவர் டாரெல் குட்லோ. இவர் மீது 8 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

மேலும் கொள்ளை மற்றும் வளர்ப்பு நாயை கொன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இவ்வாறு மொத்தம் 57 குற்ற வழக்குகள் இவர் மீது பதிவானது. இந்த வழக்குகள் இண்டியானா மாகாண கோர்ட்டில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்குகளின் விசாரணை கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வந்தது. இதில் டாரெல் குட்லோ மீதான குற்றச்சாட்டுகள் உறுதியானது. இதனையடுத்து தற்போது இந்த வழக்குகளின் தீர்ப்புகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது டாரெல் குட்லோவுக்கு 156½ ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *