யாழ்ப்பாணத்தில் மீண்டும் பரவும் கொரோனா!

யாழ்ப்பாணத்தில் 3 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் 3 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொவிட்19 தனிமைப்படுத்தல் விடுதி மீளவும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த வியாழக்கிழமை பெண் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *