கடன அட்டைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்வு!

பல கிரெடிட் கார்டு வழங்குநர்கள் வெளிநாடுகளில் முன்பு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளனர். சமீப காலமாக வங்கிகளின் வெளிநாட்டு நாணய நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக வெளிநாட்டு பயணங்களின் போது அவர்களது அட்டைதாரர்களுக்கு அதிக செலவு வரம்புகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு நாட்டின் அந்நியச் செலாவணி நிலைமைகள் கடுமையாக்கப்பட்டதால், கடன் அட்டை வழங்கும் வங்கிகள், நாட்டில் உள்ள குறைந்த அளவிலான அந்நியச் செலாவணியைப் பாதுகாக்க, வெளிநாடுகளில் பணம் செலுத்துவதற்கான அட்டைகளைப் பயன்படுத்துவதற்கு தினசரி வரம்புகளை விதித்தன.

எனினும், உள்நாட்டு வங்கித் துறையில் சமீபத்திய அதிகப்படியான அந்நியச் செலாவணி பணப்புழக்க நிலைமைகள் அத்தகைய வரம்புகளை அகற்றுவதற்கும், அட்டைதாரர்கள் தங்கள் கிரெடிட் கார்டு வரம்புகளை அதிகரிப்பதற்கும் பல கிரெடிட் கார்டு வழங்குநர்கள் தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *