இலங்கையில் எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயம்!

கிராமப்புறங்களில் அமைந்துள்ள பல எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயத்தில் இருப்பதாக கனிம எண்ணெய் பிரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

QR குறியீடு மூலம் எரிபொருள் விநியோகம் செய்யப்படுவதால், மின்சாரக் கட்டணம் மற்றும் ஏனைய செலவுகள் அதிகரிப்பு, எரிபொருள் விற்பனை மட்டுப்படுத்தப்பட்டமை உள்ளிட்ட பல காரணிகளினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அதன் இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த வருடம் ஜனவரி முதல் இந்த வருடம் ஜனவரி வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் எரிபொருள் விற்பனை 30 முதல் 70 வீதத்திற்கு இடையில் குறைந்துள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதில், மண்ணெண்ணெய் விற்பனை மிகவும் குறைந்துள்ளது. அந்த சதவீதம் 70 சதவீதம். லங்கா ஒட்டோ டீசல் விற்பனை 50 சதவீதம் குறைந்துள்ளது. பெட்ரோல் விற்பனையும் 30 சதவீதம் குறைந்துள்ளது.

எரிபொருள் விற்பனை தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் ஊடாக இந்த உண்மைகள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *