இலங்கையில் ரக்பி உலகக் கிண்ணம்!

ரக்பி உலகக் கிண்ண வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும் வெப் எல்லிஸ் கிண்ணத்தை காணும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிடைத்துள்ளது.

அதன் பிரகாரம் வார இறுதியில் கொழும்பு மற்றும் கண்டியில் இந்த கிண்ணத்தை காணும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிடைத்துள்ளது.

கிண்ணமானது லாங்டாங் பிளேஸில் சனிக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். பிற்பகல் முதல் ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும். கிண்ணம் ஞாயிற்றுக்கிழமை CR & FCக்கு எடுத்துச் செல்லப்படும்.

பின்னர் கிண்ணம் கண்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, கண்டி விளையாட்டுக் கழகத்தின் தாயகமான நித்தவெல விளையாட்டுக் கழகத்தில் பெப்ரவரி 22 ஆம் திகதி காலை 10 மணி முதல் காட்சிப்படுத்தப்படும்.

ரக்பி உலகக் கிண்ணம் 2023-ம் ஆண்டு பிரான்சில் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *