புதிதாக பரவும் ஆபத்தான வைரஸ் 1200 பறவைகள் பலி!
பிரான்ஸில் பறவைகளிடையே மிக ஆபத்தான வைரஸ் ஒன்று பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக இதுவரை 1,200 இற்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Avian flu வைரசே பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தவார வெள்ளிக்கிழமை மட்டும் 180 பறவைகளுக்கு மேல் உயிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Essonne மாவட்டத்தில் கடந்த ஜனவரி 15 ஆம் திகதியில் இருந்து இதுவரை 1,200 பறவைகளுக்கு மேல் பலியாகியுள்ளதாக அறிவிக்கப்படுள்ளது.
மூன்று வாரங்களாக இந்த நிலை தொடர்வதாகவும், இல் து பிரான்சுக்குள் இந்த வைரஸ் பரவல் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது