மைத்திரியின் மன்னிப்பை ஏற்க முடியாது கத்தோலிக்க திருச்சபை அறிவிப்பு!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது ஆட்சிக் காலத்தில் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு முழு கத்தோலிக்க மக்களிடமும் மன்னிப்பு கோரியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தயார் எனவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கத்தோலிக்க திருச்சபை இன்று பிற்பகல் செய்தியாளர் மாநாட்டை ஏற்பாடு செய்து முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு கத்தோலிக்க மக்களிடம் மன்னிப்பு கேட்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளது.
கத்தோலிக்க மக்களிடம் விருப்பு வாக்குகளை அதிகரிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மன்னிப்புக் கோருவதாக கொழும்பு பேராயர்களின் மக்கள் தொடர்பாடல் பணிப்பாளர் ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.