நாட்டிற்கு எதிரான செய்தி வெளியிட்ட 191 இணையத்தளங்களை மூடுவதற்கு உத்தரவு!

நாட்டிற்கு எதிரான செய்திகளை வெளியிட்ட குற்றச்சாட்டில் 191 இணையத்தளங்களை மூடுவதற்கு பங்களாதேஷ் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது

புலனாய்வு முகவரகங்களின் அறிக்கைகளையடுத்து, இந்த இணையத்தளங்களை முடக்குமாறு அந்நாட்டின் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் முகவரகத்துக்கு அரசாங்கம் உத்தரவிட்டது என தகவல்துறை அமைச்சர் ஹசன் மஹ்மூத், நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

விமர்சனங்களை ஒடுக்குவற்கு பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து அமெரிக்கா உட்பட வெளிநாடுகள் நீண்டகாலமாக கவலை வெளியிட்டு வந்தன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *