இலங்கையில் நோயாளிகளினால் நிரம்பி வழியும் வைத்தியசாலைகள்!

இலங்கையில் அரச வைத்தியசாலைகளில் நோயாளர்களின் வருகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனியார் வைத்தியசாலைகளில் கட்டணம் மற்றும் மருந்துகளின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் மற்றும் கிளினிக்குகளுக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு காரணமாக சிரமத்திற்குள்ளாகும் நிலை காணப்படுவதாகவும் நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு காரணமாக வெளியில் இருந்து மருந்துகளை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *