நுவரெலியாவில் கோர விபத்து 7 பேர் பலி 40 பேர் காயம்!
நுவரெலியா – நானுஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றிவு இந்த விபத்தில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படடுள்ளனர்.
இன்று இரவு பேரூந்து ஒன்றும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
கொழும்பு தேஸ்டன் பாடசாலையின் மாணவர்கள் சுற்றுலா சென்ற பேரூந்து, நுவரெலியாவில் இருந்து நானுஓயாவுக்கான ரதெல்ல குறுக்கு வழியில் கொழும்பை நோக்கி பயணித்துள்ளது.
பேரூந்து நானுஓயா வளைவு ஒன்றில் பயணித்த போது, ப்ரேக் உரிய வகையில் இயங்காமையால் டிக்கோயா பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கி சென்ற வான் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றுடனும் மோதி பள்ளத்தாக்கில் வீழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் 40 பேர் காயமடைந்துள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது