தேர்தலில் போட்டியிட இருந்த பெண் படுகொலை!
இந்த வருடம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடவிருந்த பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மினுவாங்கொட பிரதேசத்தில் இக்கொலை மேற்கொள்ளப்பட்டதுடன், கொலையின் பின்னர் கொலையாளிகள் அவரது வீட்டிற்கு தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
அறுபத்தைந்து வயதுடைய பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்