சிறுநீர் கழித்த பின் அதிக துர்நாற்றம் வீசினால் ஆபத்து!
சிறுநீர் துர்நாற்றம் பிரச்சனை: பொதுக் கழிப்பிடங்களை பலரும் தவிர்க்க காரணம் அதன் துர்நாற்றம்தான்.
அது கழிவரையிலிருந்து வருகிறது என்பதை விட கழிக்கும் சிறுநீரிலிருந்து வருகிறது என்பதுதான் உண்மை. இதற்கு காரணம் சிலருடைய சிறுநீர் மூக்கை துளைக்கும் அளவிற்கு துர்நாற்றம் வீசும். பொதுக்கழிப்பிடங்கள் மட்டுமன்றி வீட்டில் இருக்கும் கழிவரையிலும் நீங்கள் சிறுநீர் கழித்த பின் துர்நாற்றம் வீசக் கூடும்.
எனவே நீங்கள் சிறுநீர் கழித்தபின் துர்நாற்றம் வீசுகிறது எனில் அதற்கு என்ன காரணமாக இருக்கக்கூடும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
நீரிழிவு நோய்: சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சிறுநீரிலும் அதிக துர்நாற்றம் வீசும். நீரிழிவு பிரச்சனை அதிகரிக்கும் போது, உடல் இரத்தத்தில் உள்ள கூடுதல் சர்க்கரையை சிறுநீர் மூலம் அகற்ற முயற்சிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், யூனிட்டில் சர்க்கரையின் அளவு அதிகரித்து, கடுமையான துர்நாற்றம் வரத் தொடங்குகிறது.
சிறுநீரகப் பாதை தொற்று: சிறுநீர் பாதை நோய்த்தொற்று (Urinary Tract Infections) பிரச்சனையால் அவதிப்படுபவர்களின் சிறுநீரில் கடுமையான துர்நாற்றம் வீசலாம். அதாவது தொற்று பாக்டீரியாக்களின் கலப்படமே இந்த துர்நாற்றத்திற்குக் காரணம். இந்த பிரச்சனை ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் இருக்கும். இதில் உங்களுக்கு சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற பிரச்சனைகளையும் அனுபவிக்கக் கூடும்.
போதுமான நீர் அருந்தாமை: போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றாலும் உங்கள் சிறுநீர் துர்நாற்றம் வீசும். நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை எனில் கெட்ட நீரின் அளவு அதிகமாக இருக்கும். இதனால் உங்கள் சிறுநீர் துர்நாற்றம் வீசும்.
நோயை எப்படி அறிவது?
சிறுநீரில் அதிக துர்நாற்றம் வீசுவதாக நீங்கள் உணர்ந்தால், உங்களுக்கு என்ன நோய் இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியுமா? நீரிழிவு நோய், யுடிஐ அல்லது வேறு எந்த நோயாக இருந்தாலும், எல்லாவற்றின் அறிகுறிகளும் வேறுபட்டவை. இதன் அடிப்படையில் நோயைப் பற்றி அறிந்து கொள்ளலாம். இது தவிர, அறிகுறிகளைக் கண்டவுடன், நீங்கள் மருத்துவரை அணுகி உங்கள் பரிசோதனையை மேற்கொள்ளலாம்.