போராடி வென்றது இந்தியா!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி 2 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து, 163 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 160 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இதன் மூலம் 3 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *