அரபு நாடுகளில் வறுமையில் வாடும் 130 மில்லியன் மக்கள்!
ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய ஆய்வு அறிக்கையின்படி, 2022ல் அரபு பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் வேலையின்மை 12 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது உலகின் மிக உயர்ந்த மதிப்பு என்று உலக அமைப்பு கூறுகிறது.
அந்த நாடுகளில் 130 மில்லியன் மக்கள் வறுமையில் வாடுவதாகவும் கூறப்படுகிறது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் வறுமை நிலை 36 சதவீதமாக உயரும் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
எனினும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் அரபு பிராந்தியத்தில் பணவீக்கம் எட்டு சதவீதமாக குறையும் என ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது