விமானத்தில் திடீர் தீ உயிர் தப்பிய 167 பயணிகள்!

அமெரிக்காவில் நியூயார்க் விமானநிலையத்தில் தரை இறங்கிய விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 167 பயணிகள் உயிர் தப்பி உள்ளனர்.

Barbadosல் இருந்து வந்த ஜெட்ப்ளூ விமானம் நியூயார்க்கில் உள்ள ஜான் எப் கென்னடி சர்வதேச விமானநிலையத்தில் தரை இறங்கியது.

அப்போது விமானத்தில் இருந்த பயணி ஒருவரின் மடிகணினியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

இதனையடுத்து அடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

இச் சம்பவத்தில் 7பேர் காயம் அடைந்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *