இலங்கையில் மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ள கட்டுப்பாடுகள்?

சீனாவில் மீண்டும் கோவிட் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவிலும் சில நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என சுகாதார தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்காரணமாக இலங்கையில் எதிர்காலத்தில் மீண்டும் முகக்கவச பாவனையை கட்டாயமாக்கும் யோசனை ஒன்றும் கொண்டுவரப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன், நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை மீண்டும் கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டும் வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *