தமிழ்நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை!
நாளை முதல் தமிழ்நாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். சீனா, ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர்.பரிசோதனை செய்யப்படும். தமிழ்நாட்டில் கடந்த 6 மாதமாக கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார்