உலகப் புகழ் பெற்ற புலனாய்வு செய்தியாளர் காலமானார்!

உலகப் புகழ்பெற்ற புலனாய்வு செய்தியாளர் ட்ரூ கிரிஃபின் காலமானார்.

அவர் CNN இல் தொழில்முறை செய்தியாளராக பணியாற்றினார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த போது அவருக்கு வயது 60 ஆகும்.

ட்ரூ கிரிஃபின், CNN விருது பெற்ற மூத்த புலனாய்வு செய்தியாளர் ஆவார். அத்துடன், ஒரு சிறந்த புனைகதை எழுத்தாளரும் ஆவார்.

அவர் சுமார் இரண்டு தசாப்தங்களாக பணியாற்றி நூற்றுக்கணக்கான கதைகள் மற்றும் ஆவணப்படங்களைத் தயாரித்துள்ளார்.

அவர் தனது பத்திரிகை வாழ்க்கையில் எம்மிஸ், பீபாடிஸ் மற்றும் முர்ரோ போன்ற மதிப்புமிக்க விருதுகளுடன் கௌரவிக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *