Excel World வழங்கும் பனிக்கால இடம்!
வரவிருக்கும் பண்டிகைக் காலக் கொண்டாட்டங்களை மனதிற்கொண்டு, எக்செல் வேர்ல்ட் அதன் Snow World அனுபவத்தை மீண்டும் தொடங்கிவைகின்றது.
மூன்று வருட இடைவெளிக்குப் பின்னர், மேம்பட்ட வண்ணங்கள், ஒளியூட்டல்கள் என்பவற்றுடன் மேலும் பலவற்றை புதிதாக வழங்குவதன் மூலம் தனித்துவமான பனிக் – குளிர்வூட்டும் இடம் பொதுமக்களுக்காக மீண்டும் தொடங்கப்படவுள்ளது.
இப்புதுமையான அம்சங்கள், வட துருவத்தில் நத்தார் பாப்பாவின் பனி குளிர்காலத்தை நினைவூட்டும் பனிக்கட்டி நிறைந்த குளிர்கால அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள அனைத்து வயதினரையும் கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கும்.
இது தவிர, முழுக் குடும்பத்திற்குமென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட விளையாட்டுக்கள் மற்றும் பொழுதுபோக்குகளை உள்ளடக்கிய “Festive Carnival” நிகழ்வையும் எக்செல் வேர்ல்ட் ஏற்பாடுசெய்யவுள்ளது.
2017 ஆம் ஆண்டு முதல் எக்செல் வேர்ல்டுக்கு 450,000-500,000 எண்ணிக்கையிலனோரின் வருகையுடன், தினமும் சராசரியாக 1,500 பேர் ஸ்னோ வேர்ல்டை பார்வையிட வருகை தந்ததுடன் மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பின்னர், இந்த டிசம்பரில் வாடிக்கையாளர்களின் ஆர்வமும் அதிகரித்து எண்ணிக்கையும் உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.