பாடசாலை உபகரணங்களை அதிக விலைக்கு விற்பனை செய்வோர் மீது சட்ட நடவடிக்கை!

பாடசாலை அப்பியாசக் கொப்பிகள் மற்றும் பாடசாலை உபகரணங்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட, அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

பாடசாலை அப்பியாசக் கொப்பிகளின் விலையை மாற்ற வேண்டாம் என கோரிக்கை விடுத்தும் அவற்றினதும் பாடசாலை உபகரணங்களினதும் விலைகளை மாற்றி அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *