திருந்தாத ராஜபக்ச குடும்பத்தை விரட்டி அடித்த மக்கள்!

ராஜபக்சக்கள் மீண்டும் 2019 இல் ஆட்சிக்கு வந்த போது அவர்கள் திருந்துவார்கள் என்று நாங்கள் மட்டுமல்ல மக்களும் எதிர்பார்த்தார்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

ஆனால், அவர்கள் திருந்தவில்லை. அதனால்தான் அவர்களை மக்கள் கூண்டோடு விரட்டியடித்தார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் ராஜபக்ச குடும்பத்தை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்குப் பாடுபட்டீர்கள். ஆனால், இறுதியில் அவர்களை நீங்கள் வெறுத்தமைக்குக் காரணம் என்ன? அவர்களை மக்கள் விரட்டியடிக்கக் காரணம் என்ன? என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் போதே விமல் வீரவன்ச மேற்கண்டவாறு கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *