இலங்கையில் அரியவகை மீன்பிடி பூனை கண்டுபிடிப்பு!
திருகோணமலை மூதூர் 64 ஆம் கட்டை பகுதியில் மீன்பிடி பூனை இனம் பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மீன்பிடிப் பூனை இலங்கையில் கொடுப்புலி என அழைக்கப்படுவதுடன் இது தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகின்றது.
இவ்வாறு பிடிக்கப்பட்ட மீன்பிடி பூனை பொதுமக்களினால் வன ஜீவராசிகள் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இப்பகுதியில் நீண்ட காலமாக வீடுகளில் உள்ள வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி வந்த நிலையில் பொதுமக்களினால் பிடிக்கப்பட்டுள்ளது