இஸ்லாம் மதத்தை விட்டுக் கொடுக்காத கட்டார் மன்னர்!

எரிபொருள் வளம் மிக்க கட்டார் நாட்டின் ஆட்சியாளர் தாமிம் பின் ஹமாத் அல் தானி இன்றைய நிலையில் உலக முஸ்லிம்களின் உள்ளங்களை வென்றதொரு தலைவராகக் காணப்படுகின்றார்.

கட்டாரின் தலைநகர் டோஹாவில் தற்போது நடத்தப்பட்டு வரும் உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டித் தொடரின் போது இஸ்லாத்தை விட்டுக் கொடுக்காத வகையில் அவர் எடுத்துள்ள முடிவுகளும் நடவடிக்கைகளுமே இதற்கு காரணம்.

உலகக் கிண்ண காலபந்தாட்டத் தொடரை இவ்வாண்டு நடத்தும் வாய்ப்பைப் பெற்ற உலகின் முதலாவது முஸ்லிம் நாடாக கட்டார் திகழ்கின்றது. சுமார் 220 பில்லியன் டொலர்கள் செலவில் இந்தப் பேட்டிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் இவ்வாண்டு இப்போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பை கட்டார் பெற்றுக்கொண்டது முதல் மேற்குலகும் அதன் வளைகுடா நேச நாடுகளும் இன்னும் சில அரச சார்பற்ற நிறுவனங்களும் உதைபந்தாட்ட அணிகளும் கட்டார் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்த வண்ணமே இருந்தன.

முஹ்தஸம் ஏ தலோல் என்ற பத்தி எழுத்தாளரின் கருத்துப்படி, “கட்டார்  மனித உரிமைகள், ஊழல், இனவாதமென எந்த குற்றச்சாட்டுக்களும் அற்றதொரு நாடு. ஜேர்மன் உள்துறை அமைச்சர் நன்ஸி பீஸர் தெரிவித்துள்ள கருத்தில் இது வெளிப்படையாக தெரிகின்றது. கருத்தில் கொள்ள வேண்டிய அளவுகோல்களின் வகைப்படுத்தல்கள் பல உள்ளன. இதுபோன்ற நாடுகளுக்கு இந்தப்போட்டித் தொடரை வழங்காமல் இருப்பதே நல்லது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிடப்படும் பிரச்சினைகள் உண்மையில் மனித உரிமைகளோடு அல்லது சிவில் சுதந்திரத்தோடு தொடர்புடையதாக இருப்பின் ஜேர்மன் அமைச்சரும் கட்டார் போட்டித தொடர் வழங்கப்பட்டதை விமர்சிக்கும் அவரது சகபாடிகளும் இஸ்ரேல் மீது தமது பார்வையை செலுத்தியிருக்க வேண்டும்.

காரணம் கடந்த 70 வருடங்களுக்கும் மேலாக அவர்கள் தான் பலஸ்தீன மக்களின் நியாயமான உரிமைகளை தொடர்ந்தும் மீறி வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்பு நாடு பல யுத்தக் குற்றங்களையும் புரிந்துள்ளது.

கடந்த ஏழு வருடங்களாகத் தொடர்ந்து உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் தொடங்க சில மாதங்களுக்கு முன்வரை, கடைசி தருணத்தில் மிகவும் தீவிரம் அடைந்த விடயம் என்னவென்றால் மேலைத்தேசங்களின் பாரபட்ச போhக்கின் ஆழம் மிகத்தெளிவாக வெளிப்பட்டது தான். அவர்களின் தார்மிகப் போக்கின் வெளிப்பாடு குறிப்பாக அவர்களின் ஒட்டுமொத்த இரட்டைவேடம் என்பன உலகுக்கு புலப்பட்டன.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் பற்றியும் அவர்கள் விமர்சனங்களை முன் வைத்தனர். ஆனால் பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகள் தான் உலகின் மிகவும் கொடிய கொடுங்கோல் ஆட்சியாளர்களைப் பாதுகாத்தும் ஊக்குவித்தும் வருகின்றன.

இவர்களின் பாதுகாப்பு பெற்றுள்ள ஆட்சியாளர்கள் தான் மத்திய கிழக்கில் 300 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களின் மனித உரிமைகளை பறித்துள்ளனர். ஒட்டுமொத்த மத்திய கிழக்கிலும் மனித உரிமைகள் பற்றி இவர்கள் பேசலாம்.

மனித உரிமைக் காவலர்களென தம்மை அழைத்துக் கொள்ளும் இவர்கள் தான் பெரும்பாலும் அபிவிருத்தி  அடைந்த எரிபொருள் வளம் மிக்க ஈராக், லிபியா, சிரியா ஆகிய நாடுகள் மீதும் சிரியா, யெமன், ஆப்கானிஸ்தான் போன்ற ஏழை நாடுகள் மீதும் குண்டுகளை மழையாகப் பொழிந்து அந்த நாடுகளை சின்னாபின்னப் படுத்தியவர்கள்.

இந்தப் பிராந்தியத்தில் தங்களால் பாதுகாத்து போஷிக்கப்படும் இஸ்ரேலின் மேலாதிக்கத்தை தொடர்ந்து பேணும் நோக்கில் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள தமது கைக்கூலி ஆட்சியாளர்களையும் இந்த அநியாயத்தின் பங்காளிகளாக பயன்படுத்தினர். இதில் மில்லியன் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதோடு, பல மில்லியன் மக்கள் அகதி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டனர்.

பெரா அபு ஹலால் என்ற பத்தி எழுத்தாளர் தெரிவித்துள்ள கருத்தில் “இந்தப் போட்டித் தொடருக்கான ஊடகப் பிரசாரம் கீழைத்தேச மற்றும் ஐரோப்பியமத்திய போக்கினால் சூழப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு பி.பி.சி. நிறுவனம் வெளிப்படையாகவே ஆரம்ப விழாவை நசுக்கியது.

பிரித்தானியாவின் ஒளி ஒலிபரப்பாளர்கள் கௌரவ குறைவாக நடந்து கொண்டரென ரசிகர்கள் குறை கூறியுள்ளனர். சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் கியான்னி இன்பான்டினோ இதற்கு பதில் அளித்துள்ளார். ஏனைய நாடுகளுக்கு தார்மிக பாடங்களை எடுக்கும் நிலையில் மேற்குலக நாடுகள் இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கட்டாரின் கால்பந்தாட்ட அணி வீரர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் கேலிச் சித்திரம் ஒன்றை பிரான்ஸ் பத்திரிகை ஒன்று வெளியிட்டிருந்தது. இவ்வாறு இந்த காழ்ப்புணாவு பட்டியல் நீண்டு செல்கின்றது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் நிராகரித்து இவ்வாண்டின் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் பிரம்மாண்டமான முறையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

உலகப் புகழ்பெற்ற நடிகர் மோர்கன் ப்ரீமென் டீவுளு மு பொப் இசை நட்சத்திரம் ஜுங்கூக் ஆகியோர் ஆரம்ப நாள் விழாவில் பங்கேற்ற போது கட்டாரில் புகழ்பெற்ற ஒரு மாற்றுத் திறனாளியும் சமூக ஊடக செயற்பாட்டாளருமான ஞானிம் அல் முப்தாவினால் புனித அல்குர்ஆன் வசனங்கள் ஓதப்பட்டு நிகழ்வுகள் தொடங்கப்பட்டன.

உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டித்தொடரின் பாதுகாப்பு பிரிவுக்கான தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் அப்துல் அஸீஸ் அப்துல்லாஹ் அல் அன்ஸாரி “இந்த சுற்றுப் போட்டி கட்டாரை அதன் சமயத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. கட்டார் எல்லோரையும் வரவேற்கின்றது. ஆனால் நாங்கள் பாரம்பரிய மிக்கதொரு தேசம். எந்தவொரு பொதுவெளி செயற்பாடும் மோசமானதாக இருந்தால் அது வெறுக்கப்படும். எமது கலாசாரத்தை மதித்து நடந்து கொள்ளுங்கள் எள்பதே எமது அன்பான வேண்டுகோளாகும்” என்று தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய போதனைகளுக்கு இசைவாக மதுபானம், ஓரினச் சேர்க்கை உள்ளிட்ட தீய செயல்களுக்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கட்டார் அமீர் ஷேக் தாமீம் உலகப் பகழ்பெற்ற இஸ்லாமிய போதகர் சாகிர் நாயக்கை விசேட விருந்தினராக அழைத்துள்ளதோடு அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசினார்.

உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டித் தொடரின்போது இஸ்லாம் தொடர்பான விரிவுரைகளை நிகழ்த்த சாகிர் நாயக் அழைக்கப்பட்டுள்ளார். வித்தியாசமான மத நம்பிக்கைகள் கொண்ட மக்களை முற்றிலும் வித்தியாசமான மற்றும் ஆரோக்கியமான ஒரு சூழலில் ஒன்றுகூடி கலந்துரையாட இப்போட்டித்தொடர் வழியமைத்துள்ளது.

கட்டார் ஆட்சியாளர் தமீம் பின் ஹமாத் அல் தானி தொடக்க விழாவில் கலந்து கொண்டு “எமது மக்கள் தமக்கிடையிலான வேற்றுமைகளை எல்லாம் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு பன்முகத் தன்மையைக் கொண்டாடும் போது எவ்வளவு அழகாக இருக்கின்றார்கள். நல்லதையும் நம்பிக்கையையும் விதைக்கும் தினங்களாக இந்த சுற்றுப் போட்டியின் எதிர்வரும் தினங்கள் அமையட்டும். உங்கள் எல்லோரையும் தோஹாவுக்கு அன்புடன் வரவேற்கின்றேன்” என்று கூறினார்.

இஸ்லாத்தின் போதனைகள் இந்தச்சுற்றுப் போட்டியின் போது கொடிகட்டிப் பறக்கின்றன. குர்ஆனிய வசனங்கள் மற்றும் ஹதீஸ் எனப்படும் இறைதூதரின் கருத்துக்கள் டோஹா முழுவதும் ஆங்காங்கே காட்சி படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளால் ஆட்சியில் அமர்த்தப்பட்டுள்ள சமயச் சார்பற்ற ஆட்சியாளர்களிடம் இருந்து இஸ்லாத்துக்கு இன்றைய யுகத்தில் இவ்வாறான ஆதரவும் வரவேற்பும் ஊக்குவிப்பும் கிடைப்பது மிகவும் அரிதானதாகும்.

அவர்கள் தமது சொந்த மக்களை நசுக்கி அவர்களின் செல்வங்களை சூறையாடிக் கொண்டு இருக்கின்றனர். இதனால் தான் மத்திய கிழக்கு, ஐரோப்பா, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் மட்டும் அன்றி இந்தோனேஷியா, மலேஷியா, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளில் வாழும் முஸ்லிம்களும் கத்தார் மன்னரை பெரும் மரியாதையுடன் பார்க்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *