நான்கு மாதங்கள் மின் கட்டணம் செலுத்தாத மோசடி ராணி திலினி!
பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திகோ குழும உரிமையாளர் திலினி பிரியமாலியின் வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
மின்கட்டணத்தை செலுத்தாததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நான்கு மாதங்களாக மின்கட்டணம் செலுத்தாமல் நிலுவையில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து நேற்றைய தினம் குறித்த வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.