திருமதி பெண்மணியாக இலங்கைப் பெண் தெரிவு செய்யப்பட்டார்!

2022 ஆம் ஆண்டுக்கான நியூசிலாந்தின் திருமதி பெண்மணியாக இலங்கை பெண் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் பிறந்த நிமாக்ஷி சசிந்திரி ரணதுங்க, என்பவரே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மிஸஸ் யுனிவர்ஸ் நியூசிலாந்தின் தேசிய பணிப்பாளர்அன்னா மேரி பரன்ட், தலைவர் மற்றும் பிரபல நடுவர் குழுவின் ஒப்புதலுடன், தனக்கு அதிகாரப்பூர்வ பட்டத்தை வழங்கியதாக நிஷி ரணதுங்க தெரிவித்துள்ளார்.

வெற்றி பெற்ற பிறகு, நிஷி ரணதுங்க, நியூசிலாந்தை பிரதிநிதித்துவப்படுத்தி, “உமன் ஆஃப் தி யுனிவர்ஸ் 2023” என்ற சர்வதேச மேடையில் நியூசிலாந்தின் மிஸஸ் வுமன் ஆஃப் தி யுனிவர்ஸ் நியூசிலாந்தில் பங்கேற்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *