இலங்கையின் பிரதமராக மீண்டும் மஹிந்த ராஜபக்ச!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமராகலாம் என பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு செல்லுமாறு மக்கள் ஒருபோதும் போராட்டம் நடத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பனை அபிவிருத்தி சபையின் தலைமை அலுவலக கட்டடத் தொகுதி திறப்பு விழாவில் கலந்துகொண்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மக்களின் எதிர்ப்பினால் சற்று விலகி இருக்கின்றாரே தவிர அவரை வீட்டுக்கு போகுமாறு மக்கள் பணிக்கவில்லை. அவ்வாறான நிலையில் அவர் மீண்டும் பிரதமராக வருவதில் எந்த பிரச்சினையும் கிடையாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதனால் நாடாளுமன்றத்தில் உரிய முறையில் தெரிவு இடம்பெறும் போது மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமராக வரக்கூடிய சாத்தியகூறு காணப்படுகிறது. எனினும் தற்போதுள்ள பிரதமருக்கு நாங்கள் முழுமையான ஆதரவினை வழங்கி வருவதாக குறி்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *