பள்ளத்தில் வீழ்ந்த பேருந்து 25 பேர் உயிரிழப்பு!
உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வாலில் நேற்றிரவு 40க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து பாரிய பள்ளம் ஒன்றில் விழுந்ததில் 25 பேர் உயிரிழந்தனர்.
சிம்டி கிராமத்திற்கு அருகே விபத்து நடந்த இடத்தில், பேரிடர் மீட்புப் படை மற்றும் காவல்துறையினரால் இரவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து மொத்தம் 21 பயணிகள் மீட்கப்பட்டனர்.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று மாநில காவல்துறை தலைவர் அசோக் குமார் ANI இடம் தெரிவித்தார்.