நிகழ்ச்சியில் பாடி முடிந்ததும் உயிரிழந்த பிரபல பாடகர்!

ஒடிசா பாடகர் முரளி மொஹபத்ரா பாடல்கள் பாடி முடித்த பின்னர் சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

ஒடிசா மாநிலம் கோராபூட் மாவட்டத்தில் துர்கா பூஜை நிகழ்ச்சியில் பாடுவதற்காக பிரபல பாடகர் முரளி மொஹபத்ரா அழைக்கப்பட்டிருந்தார்.

Murali Mohapatra

அவர் நான்கு பாடலை பாடியபின் திடீரென சரிந்து விழுந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே முரளி மொஹபத்ரா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்துவிட்டதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.

Murali Mohapatra

முரளி மொஹபத்ராவின் மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு முதல்வர் நவீன் பட்நாயக் இரங்கல் தெரிவித்துள்ளார்.    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *