குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சூரிய சக்தி மூலம் மின்சாரம்!

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் 25000 வீடுகளுக்கு சூரிய சக்தி சோலர் பெனல்கள் மூலம் மின்சாரம் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

500 மெகாவோட் புதுப்பிக்கப்பட்ட எரிசக்தியை, தேசிய மின்சக்தி கட்டமைப்பில் சேர்க்க எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரமும் அண்மையில் அங்கீகரிக்கப்பட்டது.

இதற்கென, பல்வேறு காரணங்களால் நிர்மாணப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்ட 69,000 வீடுகளில் 25,000 வீடுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. 

அந்த வீடுகளின் மேற்கூரையில் அமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தி சோலார் பெனல்கள் மூலம் 20 கிலோவோர்ட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம், 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *