உக்ரைனில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்!

உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷ்ய படையினரால் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 7 இலங்கையர்களும் மருத்துவ மாணவர்கள் அல்ல என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.

அவர்கள் சட்டவிரோதமான முறையில் ஐரோப்பாவிற்கு பயணிக்க முயற்சித்த குழுவினர் என அமைச்சர் கூறுகிறார்.

இன்று (19) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற ஆரம்ப காலத்தில் உக்ரைனில் இருந்து இந்த நாட்டுக்கு வருவதற்கு தயாராக இருந்த இலங்கையர்கள் அனைவரும் அழைத்து வரப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *