தென் கொரியாவில் 5000 இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு!

கிட்டத்தட்ட 5000 இலங்கையர்களுக்கு தென்கொரியாவில் வேலை வாய்ப்பு கிடைக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனை தெரிவித்துள்ளது.

இந்த வருட இறுதிக்குள் இந்த வேலை வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 3,000 இலங்கை தொழிலாளர்கள் கொரியாவிற்கு வேலைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி யாப்பா தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு 200,000 இலங்கையர்கள் தென் கொரியாவில் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *