ரணிலை பதவி நீக்கினால் பாரிய இரத்தக்களரி ஏற்படும் ஜோதிடர் தெரிவிப்பு!

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செல்வாக்கு 2025 ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என மூத்த ஜோதிர்வேதா பி.ஜி.பி. கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அவரை பதவியில் இருந்து நீக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து நீக்குவதற்கு எந்தவொரு நபரோ அல்லது அதிகார குழுவோ முயற்சித்தால் அது பாரிய இரத்தக்களரியில் முடிவடையும் என  அவர் கூறுகிறார்.

இணைய ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளதுடன் இலங்கை அரசியல் தொடர்பில் பல கணிப்புகளையும் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *