இலங்கையிலிருந்து வெளிநாடு செல்லும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்கு சென்று வேலை செய்வதற்கான இலங்கையர்களின் தேவை வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இந்த தகவல் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் மாத்திரம் 2 இலட்சத்து 8 ஆயிரத்து 772 இலங்கையர்கள் வெளிநாடுகளில் வேலைக்காக சென்றுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு வெளிநாடு செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்களாவர். மேலும் ஒரு இலட்சத்து இருபத்தி ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் வெளிநாடு சென்றுள்ளனர்.

இதேவேளை, இவ்வருடத்தில் இதுவரை 2 ஆயிரத்து 858 இலங்கையர்கள் தென்கொரியாவில் வேலைக்காக சென்றுள்ளனர்.

மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்தம் 5 ஆயிரம் தொழிலாளர்களை கொரியாவுக்கு வேலைக்கு அனுப்ப எதிர்பார்த்திருப்பதாக பணியகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *