ஜனாதிபதி ரணிலுக்கு நாமல் ஆலோசனை!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனக்கு ஆதரவாக வாக்களித்த 134 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டு நிலையான அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என நம்புவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
“ஜனாதிபதி இப்போது 225 எம்.பி.க்களையும் அரவணைக்கக் கூடாது. அதற்குப் பதிலாக அவர் செய்ய வேண்டியது, தனக்கு வாக்களித்த 134 எம்.பி.க்களைக் கொண்டு நிலையான அரசாங்கத்தை உருவாக்கி அவர்களில் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பதுதான். அதன் பின்னர் நாம் முன்னோக்கி செல்ல முடியும்” என நாமல் தெரிவித்துள்ளார்.