எரிபொருள் பாவனை குறைவடைந்துள்ளது!
எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான தேசிய அனுமதிப்பத்திரமான QR முறை அறிமுகப்படுத்தப்பட்டப் பின்னர், மக்கள் எரிபொருளைப் பெற்றுக்கொள்வது குறைவடைந்துள்ளதாக, எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எரிபொருளின் விலை அதிகரித்துள்ளமையும் இதற்குக் காரணம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.