மக்கள் நம்பிக்கையைப் பெற்ற தலைவர்கள் கணக்கெடுப்பில் அநுர முதலிடத்தில்!
மாற்றுக் கொள்கைக்கான மையத்தின் கணக்கெடுப்பு ஆராய்ச்சிப் பிரிவான Sosion Indicator, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான ஜனநாயக ஆட்சியில் அதிக மக்கள் நம்பிக்கையைப் பெற்ற அரசியல் தலைவர்களை அறிவித்துள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க சரியானதைச் செய்ய தேசிய அளவிலான தலைவர்கள் மீதான நம்பிக்கையின் குறியீட்டின் அடிப்படையில் இது அமைந்துள்ளது.
இந்த சுட்டெண்ணின் படி தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சரியான தீர்மானங்களை எடுப்பதில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மீது 48.5 வீத மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
ரணில் விக்கிரமசிங்க மீது 36.6 வீத மக்கள் நம்பிக்கையும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீது 29.1 வீதம் பேரும் நம்பிக்கை வைத்துள்ளனர்.
23.7 வீதம் பேர் டலஸ் அழகப்பெருமவால் நெருக்கடியை தீர்க்க முடியும் என்றும் 18.3 வீதம் பேர் பிரதமர் தினேஷ் குணவர்தன பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியும் என நம்புகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என 11.9 வீதம் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், சிறந்த ஜனநாயக சீர்திருத்தங்களுக்காக கோட்டாகோ கிராமப் போராட்டம் சிவில் எண்ணம் கொண்ட இளைஞர்களால் வழிநடத்தப்பட்டது என்று 84.3 வீதம் மக்கள் நம்புவதாக இந்த கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் வன்முறையாளர்கள் என்ற குற்றச்சாட்டை 82 வீதம் மக்கள் ஏற்கவில்லை. இந்த ஆய்வில், 75.6 வீதம் பேர் நிறைவேற்று ஜனாதிபதி பதவியை ஒழிக்க வேண்டும் என்று ஒப்புக்கொண்டுள்ளனர்.