இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்று (15) மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்களில் அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 ஆண்களும் 3 பெண்களுமே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.