இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கட்டுப்பாடு!

இறக்குமதிகளுக்கு மேலும் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு இலங்கை மத்திய வங்கி நிதி அமைச்சுக்கு அறிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி நிதி அமைச்சிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதிலிருந்து விடுவித்து உத்தரவிடுமாறு நிதி அமைச்சுக்கு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அந்நிய செலாவனி கையிருப்பு குறைவாக காணப்படுகின்றமையினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *