இலங்கையில் 12 மணிநேர மின்வெட்டு?

எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்குள் நிலக்கரி இருப்புகளை கொண்டு வருவதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாவிட்டால் 12 மணி நேரம் மின்வெட்டு ஏற்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அண்மைக்காலமாக பெய்து வரும் மழை காரணமாக இந்த நாட்களில் மின்சார உற்பத்தி பெரும்பாலும் நீர் மின்சாரம் மற்றும் நிலக்கரி மூலம் மேற்கொள்ளப் படுவதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க குறிப்பிடுகின்றார்.

எனினும், இது டிசம்பரில் செய்யப்பட வேண்டும். அக்டோபர் முதல் ஏப்ரல் வரை மட்டுமே நிலக்கரியை இறக்குமதி செய்ய முடியும் என்று அவர் மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *