முஸ்லிம்கள் இல்லாத ஊரில் முஹர்ரம் அனுசரிக்கும் இந்துக்கள்!
முஹர்ரம் மாதத்தின் 10 ஆம் நாளில் ஷியா, சன்னி முஸ்லிம்கள் முஹர்ரம் நோன்பு அனுசரிக்கிறார்கள்.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் ஹிரேபிதனூர் கிராமத்தில் இந்து மக்களும் 100 ஆண்டுகளுக்கும் மேலாக முஹர்ரம் அனுசரித்து வருகின்றனர்.
சுமார் 3 ஆயிரம் பேர் வசிக்கும் இந்த கிராமத்தில் ஒரு முஸ்லிம்கூட இல்லை. ஆனால் அங்குள்ள இந்து மற்றும் கிறிஸ்தவ மக்கள் ஒவ்வோர் ஆண்டும் முஹர்ரம் மாதத்தில் 5 நாட்கள் நோன்பு அனுசரிக்கின்றனர்.
கர்நாடகாவில் இந்து – முஸ்லிம் மக்களிடையே மோதல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்து மக்கள் முஹர்ரம் அனுசரிக்கும் நிகழ்ச்சியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன