ஒக்டோபர் 13க்குப் பின்னர் ஜனாதிபதி ரணில் பதவி விலகுவார் பிரபல ஜோதிடர் அறிவிப்பு!

ஜூலை 12 ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது ஜனாதிபதி பதவியை விட்டுவிலக நேரிடும், எதிர்பாராத ஒருவர் ஜனாதிபதியாகுவார், அவரால் இரண்டு மூன்று மாதங்களுக்கே பதவியில் இருக்க முடியும் என ஜூலை 7 ஆம் திகதி அரசியல் நிலவரங்களை கணித்து கூறிய பிரபல ஜோதிடர் கே. சரத்சந்திர தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட நேரம் மிகவும் மோசமானது எனவும், ஒக்டோபர் 13ஆம் திகதிக்கு பின்னர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து பதவியை விட்டு செல்ல வேண்டி வரும் எனவும் தெரிவித்துள்ளார், ஜனவரி மாதத்திற்கு பின்னர் பொதுத் தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே இத்தகவல்களை அவர் வழங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *