மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவரச அறிவிப்பு!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் இலக்கத் தகடு திருடும் போக்கு இருப்பதால், பாதுகாப்பற்ற முறையில் தங்கள் மோட்டார் சைக்கிள்களை நிறுத்த வேண்டாம் என்று பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அண்மையில் இடம்பெற்ற பல கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் இலக்கத் தகடுகள் பயன்படுத்தப்படுவதை அவதானித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பாக இரவு நேரங்களில் சாலையோரம் மற்றும் பிற இடங்களில் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று பொலிஸார் அறிவுறுத்தினர்.