வீட்டு வேலைக்காரரை காதலித்து கரம்பிடித்த வயோதிப பணக்கார பெண்!


பாகிஸ்தான் பெண் ஒருவர் தன்னுடைய வீட்டில் வேலைக்கு நியமிக்கப்பட்ட வேலைக்காரர் மீது காதல் கொண்டு அவரையே கரம் பிடித்திருக்கிறார்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் பகுதியை சேர்ந்தவர் நாசியா. நிலப்பிரபுவான இந்த நடுத்தர வயது பெண்மணி, தனது தோட்டம் மற்றும் வீட்டை பராமரிக்க சூபியான் என்ற நபரை வேலைக்கு சேர்த்தார். அவர் அந்த வீட்டை பராமரிப்பது, சமைப்பது, வீட்டை சுத்தப்படுத்துவது என பல வேலைகளை அக்கறையாக செய்து வந்தார். வீட்டின் உரிமையாளரான நாசியாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோதும், அவரை அருகிலிருந்து கவனித்துக் கொண்டார். அவருடைய இந்த எளிமையும் அக்கறை உணர்வும் நாசியவை பெரிதும் கவர்ந்து விட்டது. இத்தனைக்கும் அவரை விட அந்த ஆண் வயது குறைந்தவர் ஆவார். இதனை அடுத்து ஒரு நாள் அவர் அவரிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தினார். இதை சற்றும் எதிர்பார்க்காத சூபியான், அதிர்ச்சியில் ஒரு நிமிடம் மயங்கி விட்டார்.

அதன்பின் இருவரும் ஒருவர் ஒருவர் காதலை ஏற்றுக் கொண்டு நட்போடு பழகி வந்து திருமணம் செய்து கொண்டனர். இந்த சம்பவத்தை அவர்கள் சமூகவலைதளங்களில் தெரிவித்து அனைவரது கவனத்தையும் பாராட்டையும் பெற்றிருக்கின்றனர்.

ஒரு பேட்டியில் அவர்கள் கூறுகையில், என்னுடைய கத்ரீனா கைப் நாசியா எனவும் அங்கு வேலைக்காரராக பணியில் சேர்ந்த சூபியான் தான் எனக்கு சல்மான் கான் எனவும் மாறி மாறி புகழ்ந்தனர். தங்களுடைய காதல், பொருள், பணம், அழகு ஆகியவற்றை பார்த்து வரவில்லை என்றும் ஆழமானது என்றும் கூறினர். சற்று வயது வித்தியாசம் அதிகம் உள்ள பெண், வயது குறைவான நபரை திருமணம் செய்ய அங்கு எதிர்ப்புகள் இருந்தாலும், அவர்கள் அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் திருமணம் செய்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர்.

விரைவில் தன்னுடைய சொத்துக்களை தனது கணவரின் பெயருக்கு மாற்றப்போவதாகவும் கூறினார் நாசியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *