ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வெள்ளிக்கிழமை வரை காலக்கெடு!
காலி முகத்திடல் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளை சட்டவிரோதமான முறையில் ஆக்கிரமித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு முன்னதாக வெளியேறுமாறு பொலிஸாரினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் இன்று மாலை அவ்விடத்திற்கு சென்று அவர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளனர்.
அத்துடன் பொலிஸ் தலைமையகத்தினால் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.