இலங்கைக்கு எதிர்வரும் 02 வாரங்கள் மிகவும் முக்கியமானவை பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை!

நிச்சயமற்ற அரசியல் சூழல், சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகள், வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு மற்றும் எரிபொருள் நெருக்கடி போன்ற காரணங்களால் இலங்கை ஒரு நெருக்கடியான சூழலை எதிர்கொண்டுள்ளது.

இதன் காரணமாக எதிர்வரும் 02 வாரங்கள் இலங்கைக்கு மிகவும் முக்கியமானவை என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, இலங்கையின் திவால் நிலைக்கான காரணங்களில் சீனாவின் ஆதாயமற்ற திட்டங்களும், கடன் ஒப்பந்தங்களும் இருப்பதாக அமெரிக்கா எச்சரித்து வருகிறது.

சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தை இன்னும் சரியான உடன்பாடு இல்லாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது, மேலும் வட்டி விகிதங்கள் அதிகரித்து வரும் நிலையில், சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை நடத்துவது சவாலான சூழ்நிலையாக மாறியுள்ளது.

போதிய பொருளாதாரக் கொள்கைக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்தாத வரையில் இலங்கைக்கு புதிய நிதி வசதிகளை வழங்கத் திட்டமிடப் போவதில்லை என உலக வங்கி வலியுறுத்தியுள்ள பின்னணியிலேயே இது அமைந்துள்ளது.

இந்த நிலையில் தொழில்களை நடத்துவது கடினமாகிவிட்டதாகவும், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

புதிய நிதியுதவி இல்லை…. உலக வங்கி
போதிய பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை நடைமுறைப்படுத்தும் வரையில், இலங்கைக்கு புதிய நிதியுதவி வழங்குவதற்கு உலக வங்கி திட்டமிடவில்லை என உலக வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

மோசமான பொருளாதார நிலைமை மற்றும் இலங்கை மக்கள் மீது அதன் தாக்கம் குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இதற்கு பொருளாதார ஸ்திரத்தன்மையில் கவனம் செலுத்தும் ஆழமான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் தேவை என்று உலக வங்கி வலியுறுத்துகிறது.

மருந்துகள், வீட்டு எரிவாயு, உரங்கள், பள்ளிக் குழந்தைகளுக்கான உணவு மற்றும் ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கான பணப் பரிமாற்றம் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உலக வங்கி தற்போதுள்ள கடன்களின் கீழ் வளங்களை மறுசீரமைப்பதாகவும் உலக வங்கி குறிப்பிட்டது.

இந்த நிதியில் சுமார் 160 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசர தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

மேலும், மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் விநியோகம், பள்ளி உணவு மற்றும் கல்விக் கட்டணத் தள்ளுபடி போன்ற அடிப்படைச் சேவைகளை தொடர்ந்து ஆதரிக்கும் என்று உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

இந்த வளங்கள் ஏழ்மையான மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களைச் சென்றடைவதை உறுதி செய்வதற்காக வலுவான கட்டுப்பாடுகள் மற்றும் நம்பகமான கண்காணிப்பை நிறுவுவதற்கு தொடர்புடைய நிறுவனங்களுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக உலக வங்கி குறிப்பிட்டது.

அடுத்த 6 மாதங்களுக்குள், ஒரு பெரிய பெரிய பிரச்சனை

இந்த பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள தவறினால் எதிர்வரும் 06 மாதங்களுக்குள் பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுக்க நேரிடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெற முடிந்தால், சுமார் 3 பில்லியன் டொலர்கள் (நட்பு நாடுகளிடமிருந்து) கிடைக்கும். இப்போது நாங்கள் எதிர்பார்த்தபடி நட்பு நாடுகளிடம் இருந்து பணம் பெறவில்லை.

எங்களிடம் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் டொலர் அளவு உள்ளது. அந்தத் தொகையை இறக்குமதிக்கு மட்டுமே செலவிட முடியும் என ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

கடனை செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ள போதிலும், அனைத்து கடன்களையும் நாங்கள் நிறுத்தவில்லை என அவர் வலியுறுத்தியுள்ளார். உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றில் பெற்ற கடன்களை நிறுத்த முடியாது.

எந்த நிலையிலும் நாம் அந்தக் கடனை அடைக்க வேண்டும். அந்தக் கடனை அடைக்க, ஏற்றுமதியிலிருந்து ஆண்டுதோறும் பெறும் பணத்தையும், உலக வங்கியுடன் நாங்கள் முன்பு கையெழுத்திட்ட கடன் ஒப்பந்தங்களையும் பயன்படுத்த வேண்டும்.

அப்படியென்றால் சர்வதேச பிரச்சனையை உருவாக்க இது நமக்கு வாய்ப்பில்லை. சர்வதேச சமூகத்துடன் இணக்கமாக செயற்பட வேண்டிய தருணம் இது என ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *